செய்திகள்

கும்பகோணத்தில் 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

Published On 2017-09-11 08:18 GMT   |   Update On 2017-09-11 08:18 GMT
கும்பகோணத்தில் இன்று 5-வது நாளாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் பாலக்கரையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5-வது நாளாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News