செய்திகள்

திருவள்ளூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம்

Published On 2017-08-16 06:56 GMT   |   Update On 2017-08-16 06:56 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய - மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்:ஏ., முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாலசிங்கம், சித்தார்த்தன், ராசகுமார், கம்யூனிஸ்டு கட்சி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News