செய்திகள்
ஊழலுக்கு எதிராக கருத்து வெளியிட்ட கமல்ஹாசனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆதரவு
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நடிகர் கமல்ஹாசனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கூறினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மக்கள் மத்தியிலும் கமல்ஹாசன் கருத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
இந்த நிலையில் புதுச்சேரி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் 16 மணி நேரம் பணி செய்ய வேண்டும். கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் நடவடிக்கை சரியானதே.
இவ்வாறு அவர் கூறினார்.