செய்திகள்

ஆந்திராவுக்கு காரில் ரேசன் அரிசி கடத்தல்: சென்னை வாலிபர் கைது

Published On 2017-06-18 09:20 GMT   |   Update On 2017-06-18 09:20 GMT
ஆந்திராவுக்கு காரில் ரேசன் அரிசி கடத்திய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருடன் ரேசன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது 14 மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்தது. அதனை ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

இதையடுத்து காரில் இருந்த சென்னை, பெரம்பூரை சேர்ந்த ஜான் பாட்ஷாவை கைது செய்தனர். காருடன் ரேசன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி வந்த 6 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

லாரி டிரைவர் ஆந்திராவை சேர்ந்த வெங்கடேசன் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News