செய்திகள்
சோளிங்கர் திருமண மண்டபத்தில் சென்னை பெண்ணிடம் 60 பவுன் நகை கொள்ளை
சோளிங்கர் திருமண மண்டபத்தில் சென்னை பெண்ணிடம் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா (வயது50). இருவரும் சோளிங்கரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு நேற்றிரவு வந்தனர்.
திருமணம் நடைபெறும் வாலாஜா ரோட்டில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர். பிரேமா வைத்திருந்த பையில் 60 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.
இன்று காலையில் பார்த்தபோது பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்ற அறைகளிலும் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை திருட்டு போன சம்பவத்தால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் நகையை வைத்திருந்தால் திருடு போய்விடும் என்ற அச்சத்தில் சென்னையில் இருந்து கையோடு எடுத்து வந்ததாக தம்பதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா (வயது50). இருவரும் சோளிங்கரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு நேற்றிரவு வந்தனர்.
திருமணம் நடைபெறும் வாலாஜா ரோட்டில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர். பிரேமா வைத்திருந்த பையில் 60 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.
இன்று காலையில் பார்த்தபோது பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்ற அறைகளிலும் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை திருட்டு போன சம்பவத்தால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் நகையை வைத்திருந்தால் திருடு போய்விடும் என்ற அச்சத்தில் சென்னையில் இருந்து கையோடு எடுத்து வந்ததாக தம்பதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.