செய்திகள்
அவினாசியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி
அவினாசியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவினாசி:
திருப்பூர் அவினாசியை அடுத்த வடுகபாளையம் அருகே உள்ள பிச்சாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி. விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் மகேஸ்வரன் (5).
சம்பவத்தன்று சிறுவன் அருகில் உள்ள ராமன் என்பவரது வீட்டின் முன்புறம் விளையாடினான். அதன்பின்னர் சிறுவன் மகேஸ்வரன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. மகனை காணாத அவனுடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ராமன் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டின் முன்பு இருந்த தரை மட்ட தண்ணீர் தொட்டி அருகே சென்ற போது, தொட்டியினுள் சிறுவன் மகேஸ்வரன் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே மகேஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சிறுவனின் பெற்றோர் மகேஸ்வரனின் உடலை பார்த்து கதறி கண்ணீர் விட்டனர்.
இது குறித்து சேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சிறுவன் மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் அவினாசியை அடுத்த வடுகபாளையம் அருகே உள்ள பிச்சாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி. விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் மகேஸ்வரன் (5).
சம்பவத்தன்று சிறுவன் அருகில் உள்ள ராமன் என்பவரது வீட்டின் முன்புறம் விளையாடினான். அதன்பின்னர் சிறுவன் மகேஸ்வரன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. மகனை காணாத அவனுடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ராமன் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டின் முன்பு இருந்த தரை மட்ட தண்ணீர் தொட்டி அருகே சென்ற போது, தொட்டியினுள் சிறுவன் மகேஸ்வரன் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே மகேஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சிறுவனின் பெற்றோர் மகேஸ்வரனின் உடலை பார்த்து கதறி கண்ணீர் விட்டனர்.
இது குறித்து சேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சிறுவன் மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.