செய்திகள்
மரத்தில் இருந்து குதித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
விழுப்புரம் பஸ் டெப்போவில் மரத்தில் இருந்து குதித்து போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம்:
விழுப்புரம் தெளி கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றிபால் ராஜ் (வயது 40). விழுப்புரம்-பில்லூர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த இவர் நேற்று இரவு வரை பஸ் ஓட்டினார்.
தான் ஓட்டிவந்த பஸ்சை விழுப்புரம் பஸ் டெப்போவில் நிறுத்திவிட்டு இரவில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹென்றிபால்ராஜை தொடர்ந்து பஸ்சை ஓட்டுமாறு அதிகாரிகள் வற்புறுத்தினர்.
இதனால் ஹென்றிபால் ராஜ் மனவேதனை அடைந்தார். போக்குவரத்து பணிமனை கட்டிடத்தின் 2-வது மாடிக்கு வேகமாக சென்றார். மாடி அருகில் உள்ள வேப்பமரத்தில் இறங்கி திடீரென்று அதில் இருந்து கீழே குதித்தார்.
இதில் ஹென்றிபால் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தெளி கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றிபால் ராஜ் (வயது 40). விழுப்புரம்-பில்லூர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த இவர் நேற்று இரவு வரை பஸ் ஓட்டினார்.
தான் ஓட்டிவந்த பஸ்சை விழுப்புரம் பஸ் டெப்போவில் நிறுத்திவிட்டு இரவில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹென்றிபால்ராஜை தொடர்ந்து பஸ்சை ஓட்டுமாறு அதிகாரிகள் வற்புறுத்தினர்.
இதனால் ஹென்றிபால் ராஜ் மனவேதனை அடைந்தார். போக்குவரத்து பணிமனை கட்டிடத்தின் 2-வது மாடிக்கு வேகமாக சென்றார். மாடி அருகில் உள்ள வேப்பமரத்தில் இறங்கி திடீரென்று அதில் இருந்து கீழே குதித்தார்.
இதில் ஹென்றிபால் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.