செய்திகள்
கோரிப்பாளையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது
வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை கோரிப்பாளையம் முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மனைவி நஜிமா பேகம் (வயது 40). இவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாணிக்கம் வீட்டில் குடியிருந்து வந்தனர்.
சம்பவத்தன்று நஜிமா பேகம், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாணிக்கம் வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்த நஜிமா பேகம் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
அவர்களை கண்டதும் மாணிக்கம் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து, தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.