செய்திகள்
சவுரவ் கங்குலி

இவர்கள் இருவருக்கும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது: சவுரவ் கங்குலி

Published On 2019-07-24 12:45 GMT   |   Update On 2019-07-24 12:45 GMT
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருவருக்கும் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ரகானேவுக்கும் இடம் கிடைக்கவில்லை.

இருவருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஒரு வீரரை அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் ரிதம் மற்றும் நம்பிக்கை அவர்களுக்கு கிடைக்கும். சில வீரர்கள் மட்டுமே எல்லா வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். சிறந்த அணிகள் சீராக விளையாடும் வீரர்களை கொண்டுள்ளது. நாட்டிற்காகவும், சீராக விளையாடுவதற்காகவும் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.



அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் பெரும்பாலான வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஷுப்மான் கில் அணியில் இல்லாததும், ரகேனே ஒருநாள் போட்டிக்கான அணியில் இல்லாததும் ஆச்சர்யம் அளிக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News