search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shubman Gill"

    • இது போன்று 89 ரன் மட்டுமே எடுக்கும்போது, இரட்டை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம்.
    • இந்த தோல்வியை மறந்து வலுவாக மீண்டு வருவது அவசியம்.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுக்கட்டியது. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் குஜராத்தை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் விருத்திமான் சஹா (2 ரன்), கேப்டன் சுப்மன் கில் (8 ரன்) டெல்லியின் வேகத்தில் அடங்கினர். இந்த வீழ்ச்சியில் இருந்து குஜராத்தால் மீள முடியவில்லை. சாய் சுதர்சன் (12 ரன்), டேவிட் மில்லர் (2 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. மிடில் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் கைவரிசை காட்டி மேலும் சிதைத்தனர்.

    இந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளம் (பிட்ச்) இந்த சீசனில் இதற்கு முன்பு பயன்படுத்தப்படவில்லை. இதனால் அதை துல்லியமாக கணிக்க முடியாமல் குஜராத் பேட்டர்கள் திகைத்து போனார்கள். விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன.

    பின்வரிசையில் ராகுல் திவேதியா (10 ரன்), ரஷித்கான் (31 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) என வெளியேறினார். இதனால் 17.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த குஜராத் 89 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் ஒரு அணி 100 ரன்னுக்குள் முடங்கியது இதுவே முதல்முறையாகும். டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாக் பிரேசர் மெக்குர்க் 20 ரன்னும், ஷாய் ஹோப் 19 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 16 ரன்னும் எடுத்தனர். விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 3-வது வெற்றியை ருசித்த டெல்லி அணி புள்ளிபட்டியலில் 9-ல் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது. குஜராத்துக்கு 4-வது தோல்வியாகும்.

    தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. ஆடுகளம் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. எங்களது சில விக்கெட்டுகளை பார்த்தால், ஆடுகளத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது தெரியும்.

    மோசமான ஷாட் தேர்வே விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்வேன். இது போன்று 89 ரன் மட்டுமே எடுக்கும்போது, இரட்டை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இந்த தோல்வியை மறந்து வலுவாக மீண்டு வருவது அவசியம். இந்த சீசனில் முதல் பாதி முடிந்துள்ளது. நாங்கள் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். முந்தைய ஆண்டுகளை போன்று பிற்பாதியில் மேலும் 5-6 ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.

    டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், 'நிறைய விஷயங்கள் எனக்கு திருப்தி அளிக்கிறது. எங்களது சிறந்த பந்து வீச்சில் இதுவும் ஒன்று. ஆனாலும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது' என்றார்.

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார்.
    • ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    இதன் மூலம் கில் புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் கேஎல் ராகுலுக்கு பின் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். கேஎல் ராகுல் 80 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை சேர்த்த நிலையில், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

    அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை 26 வயது 186 நாட்களில் விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் 24 வயது 215 நாட்களில் முறியடித்துள்ளார். 

    • ரஷித்கான் போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்.
    • நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றிக்கு பின் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது:-

    எங்களின் திட்டம் கடைசி 3 ஓவர்களில் 45 ரன்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். ஏனென்றால் இதுபோன்ற சில நேரங்களில் எளிதாக வெற்றிபெற முடியும்.

    கணக்கு போட்டு பார்த்தால், ஒரு பேட்ஸ்மேன் 9 பந்துகளுக்கு 22 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் 2 அல்லது 3 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றிபெற முடியும். இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் எந்த மாற்றமும் இருக்காது. எப்போது வெற்றி என்பது மனநிலையை பொறுத்தது தான். நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.

    இந்த ஆட்டத்தில் ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஃபினிஷ் செய்தது மகிழ்ச்சி. கடந்த போட்டியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி பந்தில் வெற்றிபெற்றது அற்புதமாக உணர்வு. ரஷீத் கான் எப்போதுமே தரமான வீரர். அவரை போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்.

    இவ்வாறு கில் கூறினார்.

    • கேட்ச் தவற விட்டது தோல்விக்கு முக்கிய காரணம்.
    • புதுப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 199 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணி 200 இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சொந்த மைதானத்தில் குஜராத் அணியின் முதல் தோல்வி இது ஆகும். இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-

    இரண்டு கேட்சகளை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்ச்களை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல. பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலைகளை சிறப்பாக செய்தனர். பந்து பேட்டிற்கு நன்றாக வரும்போது, எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம். ரன்கள் குறைவானது என்று நான் சொல்ல மாட்டேன்.

    புது பந்து பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருந்தது. 200 என்ற இலக்கு நிர்ணயிப்பு போதுமானதுதான். 15 ஓவர் வரை நாங்கள் சரியான வழியில்தான் இருந்தோம். கேட்ச்கள் தவறவிட்டது நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

    நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஐபிஎல் போட்டியின் அழகே இதுதான்.

    கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வகையில் கடைசி ஓவரில் ஏழு ரன்கள் என்ற நிலை இருந்தபோது தர்ஷன் நல்கண்டே எங்களுக்கு சிறந்த ஆப்சனாக இருந்தார்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 89 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்- சகா களமிறங்கினர். இதில் சகா 11 ரன்னில் வெளியேறினார். இதனையடுது கில்லுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 26 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த தமிழக வீரர் சுதர்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். 

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக குஜராத் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    • ஹர்திக் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
    • பாண்ட்யா மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும் என குஜராத் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது சமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்.

    ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்ட்யாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.


    கில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புபவர். அவர் ஒரு நபராக வளர்ந்தால், அவர் நிச்சயமாக முன்னோக்கி செல்லும் சிறந்த கேப்டனாக இருப்பார்.

    இவ்வாறு நெஹ்ரா கூறினார்.

    ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்ட்யாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • இங்கிலாந்து எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த 4 போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    112 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் தொடரை (4-1) வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றது.

    இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து பல கருத்துக்கள் வெளியாகின.

    இந்நிலையில் அந்த மோதலில் இதுதான் நடந்தது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய மண்ணை தவிர வெளிநாடுகளில் ஏதாவது ரன்கள் அடித்து இருக்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பதிலளித்தார். அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன்.

    மேலும் குல்தீப் எனது ஓவரில் ஒரு ரன் எடுத்து எதிர் திசைக்கு ஓடி வந்தார். நானும் எனது அடுத்த பந்தை வீசுவதற்காக திரும்பி சென்று கொண்டிருந்தேன். அப்போது உங்களது 700-வது விக்கெட் நான் தான் என்று நினைக்கிறேன் எனவும் என் மனதில் அப்படிதான் தோன்றுகிறது எனவும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நகர்ந்தோம்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

    இதனை தொடர்ந்து கில்லுடன் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேட்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டசனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார். அதற்கு அதனால் என்ன சதம் அடித்த பிறகு தானே அவுட் செய்ய முடிந்தது என பதிலளித்தார். நீங்கள் இந்த தொடரில் எத்தனை சதம் அடித்தீர்கள் என கில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ இதுவரை எத்தனை ரன்களை எடுத்திருக்கிறாய் பேச்சை நிறுத்து என கூறினார். அத்துடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473 ரன்களை எடுத்துள்ளது.
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    தரம்சாலா:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.

    ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார் ரோகித் சர்மா. இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில்லும் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதமடித்தனர். சர்ப்ராஸ் கான் 56 ரன்னும், படிக்கல் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஜடேஜா, துருவ் ஜுரல் தலா 15 ரன்னும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா

    • ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கில் 64 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன் கில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 பந்தில் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

    45 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், கில் 65 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
    • ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.

    இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    ×