என் மலர்
நீங்கள் தேடியது "shubman Gill"
- சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் சுப்மான் கில் ஆடினார்.
- சுப்மான் கில் 36 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஷிகர் தவானுடன் களமிறங்கிய தவான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே கொஞ்சமும் கூட பயம் இல்லாமல் பவுண்டரிக்கு பந்தை கில் விரட்டினார். இதனைத் தெதாடர்ந்து ஆட்டத்தின் 3-வது ஓவரில் அல்சாரி ஜோசப் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார் கில்.
இதனைத் தொடர்ந்து அடிக்க வேண்டிய பந்தை சுப்மான் கில் அடித்து ஆட, 36 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன்பு 3 போட்டியில் நடுவரிசையில் இறங்கி மொத்தம் 49 ரன்கள் அடித்த சுப்மான் கில், தற்போது தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்த கில் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். கில் அரை சதம் அடித்ததன் மூலம் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இளம் வயதில் அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளினார் கில். சச்சின் 24 வயதில் முதல் அரை சதம் அடித்தார். முதல் இடத்தில் விராட் கோலி 22 வயது 215 நாட்களில் அரை சதம் அடித்தார். சுப்மன் கில் 22 வயது 317 நாட்களில் அரை சதம் அடித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.

அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.
20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.
ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.
கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார். #IPL2019 #KKRvsMI

தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TeamIndia #VijayShankar
ரஞ்சி டிராபியில் 19 வயது இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 268, 148, 69, 91 என அசத்தியுள்ளார்.
புஜாராவை போல் 500 ரன்களுக்கு மேல் குவிக்கலாம், ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்துகளை சந்திப்பது எளிதான காரியம் அல்ல. அது இளைஞர்களுக்கான அளவுகோல் என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
புஜாரா குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டியில் ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களால் மட்டுமே நாள் முழுவதும் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய இயலும். ஒரே தொடரில் புஜாரா 1200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். இது உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. பேட்ஸ்மேன்களால் 500 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதிக அளவிலான பந்துகளை சந்தித்தது இளம் வீரர்களுக்கான அளவுகோல்.
களத்தில் நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது சிறப்பானது. அவரது பேட்டிங் விரும்பு பார்ப்பேன். தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றனர்’’ என்றார்.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 41 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது.
பின்னர் 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் ரகானே, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 14 ரன்னிலும், முகுந்த் 37 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இதனால் இந்தியா ‘சி’ அணி 85 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷான் 60 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்தார்.

ஷுப்மான் கில் சதத்தாலும், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தாலும் இந்தியா ‘பி’ 47 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 111 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 106 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘சி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 27-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ பலப்பரீட்சை நடத்துகின்றன.
பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
ஒரு கட்டத்தில் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோர் 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களாக இருந்தது. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 12.5 ஓவரில் 17 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார்கள்.

கடைசி 7 ஓவரில் (42 பந்தில்) 44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். குறிப்பாக இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா 4 ஓவரில் 30 ரன்கள் மட்டு விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே வெற்றிக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஆன ஷுப்மான கில் கூறியுள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது. பிரதிஷ் அருமையாக பந்து வீசினார். டெத் ஓவரில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.