செய்திகள்

பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது - வாசிம் அக்ரம் கண்டனம்

Published On 2019-06-18 05:07 GMT   |   Update On 2019-06-18 05:07 GMT
பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கராச்சி:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டதை அடுத்து அந்த அணிக்கு எதிரான கண்டன கணைகள் வலுத்து வருகிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வு சரியாக இல்லை. உலக கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் அணி சரியான திட்டமிடுதலுடன் சென்றதாக தெரியவில்லை. வெற்றி, தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு அங்கமாகும். ஆனால் இது மாதிரி போராடாமல் தோல்வி கண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News