செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்- இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

Published On 2019-06-03 18:07 GMT   |   Update On 2019-06-03 18:26 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை விழ்த்தி பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜேசன் ராய் மற்றும் ஈயான் மோர்கன்  ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இதில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து 107 ரன்னில் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் 103 ரன்னில் வெளியேறினார். வெற்றியை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News