செய்திகள்

ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசல்: இங்கிலாந்து லயன்சை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

Published On 2019-01-29 13:55 GMT   |   Update On 2019-01-29 13:55 GMT
ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாச இந்தியா ‘ஏ’ 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது #RishabhPant
இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா ‘ஏ’ வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் 4-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணியின் லோகேஷ் ராகுல், கெய்க்வார்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்க்வார்டு ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் கேஎல் ராகுல் 42 ரன்கள் சேர்த்தார். ரிக்கி புய் 35 ரன்னிலும், கேப்டன் பவ்னே 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. ரிஷப் பந்த் 76 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 73 ரன்களும், ஹூடா 47 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
Tags:    

Similar News