செய்திகள்

நாதன் லயன் பந்துவீச்சை சமாளிக்க கங்குலி அறிவுரை

Published On 2018-12-21 07:00 GMT   |   Update On 2018-12-21 07:00 GMT
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். 2 டெஸ்டிலும் சேர்த்து நாதன் லயன் 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இந்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாதன் லயன் பந்து வீச்சு தொடர்பாக கேப்டன் விராட்கோலிக்கு தகவல் அனுப்ப நினைத்து இருந்தேன். ஆனால் இன்னும் அனுப்பவில்லை. அவரிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் வெளிநாட்டு மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக விக்கெட்டுகளை பறிகொடுக்கக்கூடாது.



லயன் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை தடுத்து ஆடினார்கள். அதற்கு பதிலாக அவரது பந்துவீச்சை தாக்குதல் தொடுத்து விளையாட வேண்டும். அப்போழுது தான் 300-ல் இருந்து 350 ரன் வரை எடுக்க முடியும்.

லயன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னே, முரளீதரன், சுவான் ஆகியோர் போல் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
Tags:    

Similar News