என் மலர்
நீங்கள் தேடியது "Sourav Ganguly"
- 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவர் பதவியை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார்.
- பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் பதவியை 2019-ம் ஆண்டு முதல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார். அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் ஐ.சி.சி. என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என கூறப்பட்டது.
அவரை அந்த பதவிக்கு போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குரல் கொடுத்தார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கடந்த வாரம் வலியுறுத்தினார்.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்திருந்த ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம், ஐ.சி.சி. தேர்தல் பற்றி விவாதிக்காமல் முடிந்துள்ளது.
இதனால் சவுரவ் கங்குலி, ஐ.சி.சி.யின் தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக சாடி உள்ளார்.
இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.சி.சி.க்கு ஏன் சவுரவ் கங்குலி அனுப்பப்படவில்லை? இது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள யாரோ ஒருவரின் நலனுக்காகத்தான். (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளார்.)
நான் பா.ஜ.க. தலைவர்கள் பலரோடு பேசி விட்டேன். ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இது வெட்கக்கேடானது. அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்குலி பா.ஜ.க.வில் சேர மறுத்ததால்தான் அவர் ஐ.சி.சி. தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- கங்குலியை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா:
கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:
கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின் பெருமையும் கூட. அவர் ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார்.
கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐ.சி.சி. தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட்டால் பி.சி.சி.ஐ. ஆதரவுடன் கங்குலி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
- கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது.
- கங்குலிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.
முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர்.
நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.
கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.
இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
- வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள்..
- நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். ஒருபக்கம் ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல் கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.
அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதால் அவர் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்காமல் இருந்த சவுரவ் கங்குலி தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார்.
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் பதவி குறித்து கங்குலி பரபரப்பாக பேசியதாவது:-
பிசிசிஐ-யில் நான் நீண்ட காலமாக நிர்வாகியாக இருந்தேன். இனி அதிலிருந்து விலகி வேறு ஒரு புதிய பாதையில் செல்ல இருக்கிறேன். நீங்கள் எப்போதும் வீரராகவும், நிர்வாகியாகவும் இருக்க முடியாது. ஆனால் இரண்டு பணிகளையும் செய்தது நன்றாக இருந்தது.
வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள். நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.
அது போன்ற உயரத்திற்கு செல்வதற்கு நீங்கள் வருட கணக்கில் உழைக்க வேண்டும். ராகுல் டிராவிட் ஒரு நாள் அணியில் இருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்ட போது நான் அவருக்கு ஆதரவாக நின்றேன். விளையாட்டை பொறுத்தவரை நான் அடித்த ரன்களையும் கடந்து , பலர் மற்ற விஷயங்களையும் நினைவில் கொள்கிறார்கள். உங்கள் அணியினருக்காக நீங்கள் ஒரு தலைவராக என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
- கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது.
- கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக போட்டியிடுகிறார். கங்குலிக்கு பதில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் பாஜகவில் கங்குலி சேராததால், 2வது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அவரை அக்கட்சி அவமானப் படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே, கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது என்றார்.
கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் குணால் கோஷ் கூறினார்.
ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் திரிணாமுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாஜக, கொல்கத்தா இளவரசரை, ஒருபோதும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளது.
- கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர்.
- சவுரவ் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி பனியனை கழற்றி சுழற்றியதும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள பால்கனியில் நின்றபடி வீரர்கள் போட்டியை ரசிப்பதையும், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் கவுரவமாக நினைப்பார்கள்.
2002-ம் ஆண்டு நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிஆட்டத்தில் இந்தியா 326 ரன்கள் இலக்கை 'சேசிங்' செய்ததையும், அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி பனியனை கழற்றி சுழற்றியதும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
தற்போது கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர்.
அதை கங்குலி நேற்று திறந்து உற்சாகமாக கொடியசைத்த காட்சியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது.
- கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடினார்.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒரு நாள் கோப்பையை அவர் இந்தியாவுக்காக வென்று கொடுத்தார். இது குறித்து கங்குலி கூறியதாவது:- இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வழங்குகிறார்கள். இந்த முறை நான் அதைப் பெற்றேன் என்றார்.
முன்னதாக கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணியிடம் இழந்த போதிலும், டி-20 தொடரை போல, இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன்ஷிப்புடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து மண்ணில் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகும். அங்கு 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி நன்றாகவே ரன் குவித்து வருகிறது.
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாகும். இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணியை, தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடக் கூடாது. இரு அணிகளும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்ததாகும். தற்போதைய இந்திய அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்கு நெருக்கடி இருப்பது நல்லது தான். நெருக்கடியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். மற்ற அணிகளுக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. உலக கோப்பை போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.
இவ்வாறு கங்குலி கூறினார்.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கான அணிகளின் உத்தேச பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அதில் இருந்து 15 பேர் கொண்ட இறுதி அணியை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘கெடு’ விதித்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு சில இடத்திற்கு யாரை சேர்ப்பது என்பது பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் 4-வது வரிசையில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இந்த வரிசைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அந்த இடத்தை பிடிப்பாரா? என்பதிலும் உறுதி இல்லை. இதனால் இந்திய அணியின் 4-வது வரிசையில் ஆடப்போவது யார்? என்பது மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த சீசனை எடுத்துக் கொண்டால் ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்) சிறப்பாக ஆடினார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. மூத்த விக்கெட் கீப்பர் டோனி இருப்பதால் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருக்கிறார். நிலையான இடம் கிடைக்காததால் ஒரு நாள் போட்டியில் அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை. ஆனால் ரிஷப் பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று வடிவிலான போட்டிகளில் இருந்தும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம். அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடின உழைப்பாளி. கடந்த 4 ஆண்டுகளாக அவரை வலை பயிற்சியில் கவனித்து வருகிறேன். பயிற்சிக்கு முதலிலேயே வந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடுவார். நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார்.
இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்கு பலரது பெயர் பரிசீலிக்கப்படலாம். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டு தான் அந்த வரிசைக்கு சரியான வீரர் யார் என்பதை முடிவு செய்ய உதவும் என்று நினைக்கிறேன். புஜாராவை கூட அந்த வரிசையில் இறக்கலாம் என்று ஏற்கனவே யோசனை சொன்னேன். ஏனெனில் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். நான் கேப்டனாக இருந்தபோது, ராகுல் டிராவிட் இந்த பணியை செய்தார். வேறு எந்த வழியும் இல்லை என்றால் புஜாராவை வைத்து பரிசோதித்து பார்க்கலாம். ரிஷப் பந்த் அல்லது அம்பத்தி ராயுடு இதற்கான வாய்ப்பில் இருக்கலாம். நாங்கள் கருத்து தான் சொல்ல முடியும். ஆனால் அந்த வரிசைக்கு யார் இறக்கப்பட வேண்டும் என்பது கேப்டன் கோலிக்கு தான் தெரியும்.
விராட் கோலி எந்த வரிசையில் விளையாடினாலும் ரன்கள் குவிப்பார். என்னை பொறுத்தவரை அவர் 2-வது விக்கெட்டுக்கு இறங்க வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
பேட்டியின் போது உடன் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனுமான ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘நானாக இருந்தால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ரிஷப் பந்தை தேர்வு செய்வேன். அவரை 4-வது வரிசைக்கு பயன்படுத்துவேன். அவரிடம் இருக்கும் திறமைக்கு அவரால் உலக கோப்பையை வென்று தர முடியும். அவர் துருப்பு சீட்டாக இருப்பார்’ என்றார். #IPL #SouravGanguly #WorldCup2019
கிரிக்கெட் வீரர் டோனி மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்.
அவரிடம் சுமார் 20 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி இல்லாத நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலாவருவது அவருக்கு பிடித்த பொழுது போக்காக உள்ளது.
டோனி போலவே மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஆர்வத்துடன் உள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.
அந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 3 ஆண்டுகள் வாரண்டி கொண்ட அந்த மோட்டார்சைக்கிள் அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் இதே ரக புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.
313 சி.சி. சக்தி கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிநவீன வசதிகள் கொண்டது. பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் ஜெர்மனி, தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Yuvrajsingh #SouravGanguly #MSDhoni
In Barcelona .. dad and Sana ... pic.twitter.com/Ic3U8KPTgs
— Sourav Ganguly (@SGanguly99) December 22, 2018
இவரை ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் விளையாடும் முன்னணி அணியான பார்சிலோனா அழைத்து, அந்த அணியின் ஜெர்சியில் ‘DADA’ எனக் குறிப்பிட்டு பரிசளித்துள்ளது. கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் சானாவுடன் அமர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு ‘‘பார்சிலோனாவில் அப்பா, சானா’’ என்று பதிவிட்டுள்ளார்.