என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Australia"
- இந்திய வம்சாவளி தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
- வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் அவரை பிடித்து சுட்டுக்கொன்றது. இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
அவருடைய பெயர் ஜோயல் காச்சி (40) என்பதும் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி எமி ஸ்காட் சம்பவ இடத்தில் லாவகமாக மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளி தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். சிட்னி நகரை சேர்ந்த டெபாஷிஸ் சக்ரபர்த்தி-ஷாய் கோஷல் தம்பதி சம்பவம் நடந்தபோது வணிக வளாகத்தில் இருந்துள்ளனர். தாக்குதலின்போது அங்குள்ள சேமிப்பு கிட்டங்கியில் மறைந்திருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றி கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வணிக வளாக கட்டிடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) நுழைந்த ஒருவர் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மற்றவர்களை தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலைமைகள் இன்னும் தெரியவில்லை என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இனிமேல் யாரும் இங்கு வரவேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.
அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.
சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி 1055 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.
- பாகிஸ்தான் 970 ஒருநாள் போட்டியில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளது.
கான்பெரா:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இன்று 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்று நடந்த 3-வது ஒருநாள் ஆட்டம் அந்த அணியின் 1000-வது ஒருநாள் போட்டியாகும். ஆயிரம் போட்டியில் விளையாடிய 2-வது நாடு ஆஸ்திரேலியாவாகும். இந்திய அணி 1055 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் 970 ஒருநாள் போட்டியில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளது.
கான்பெராவில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 24.1 ஓவரில் 86 ரன்னில் சுருண்டது. 87 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.
- ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகி, வணிக வாழ்க்கையை தொடர இருக்கிறார்.
- புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான பாதுகாப்புமிக்க செழிப்பான ஒரு நாடாக மாற்ற, நாட்டின் உயரிய நிலையில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி. அனைத்துலக பெருநிறுவத்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், உலகளாவிய கார்ப்ரேட் துறையில் புதிய சவால்களை எடுப்பேன்" எனத் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், இரகசியமாக பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் ஸ்காட் மோரிசன் என்பது குறிப்பிடதக்கது.
- டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாட தொடங்கியது.
இதில், ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.
- டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
- சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.
டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்
ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.
சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின், இங்கிலாந்தை வீழ்த்தியது
- "நான் எதிர்பாராத நேரத்தில் அவர் முத்தமிட்டார்" என ஹெர்மோசோ நீதிமன்றத்தில் கூறினார்
கடந்த 2023 ஆகஸ்ட் 20 அன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் இப்போட்டியில் மோதின.
பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில், ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள் பங்கேற்ற போது, அந்நாட்டின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் (Luis Rubiales) ஜென்னி ஹெர்மோசோ (Jenni Hermoso) எனும் வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்டார்.
தகாத முறையில் நடந்து கொண்ட ரூபியாலஸின் நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, "நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். அதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதிகபட்ச மகிழ்ச்சியில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டேன்" என ரூபியாலஸ் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு எதிராக எழுந்த கண்டனங்களால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"எனக்கு ரூபியாலஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை" என ஹெர்மோசோ அப்போது கருத்து தெரிவித்தார்.
பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்நிகழ்வு குறித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் ஹெர்மோசோ, தனது கருத்துக்களை பதிவு செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
"என் சம்மதத்துடன் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. நான் எதிர்பாராத நேரத்தில் ரூபியாலஸ் அவ்வாறு நடந்து கொண்டார்" என ஹெர்மோசோ விசாரணையில் தெரிவித்தார்.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோக்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
ஸ்பெயின் சட்டப்படி ஒருவரின் சம்மதமில்லாமல் அவருக்கு முத்தமிடுவது பாலியல் குற்றமாக கருதப்படும். எனவே, இப்போது நடைபெறும் விசாரணை முடிவில்தான் இவ்வழக்கில் ரூபியாலிஸ் பாலியல் குற்றம் புரிந்தவராக விசாரிக்கப்படுவாரா என தெரிய வரும்.
- ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- இந்தியா 148 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கௌர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 19 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கௌர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதன் காரணமாக இந்திய அணி 32.4 ஓவர்களில் 148 ரன்களை மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜியா வார்ஹெம் 3 விக்கெட்டுகளையும், அலானா கிங், அனபெல் சதர்லாந்து மற்றும் மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஷ்லெய்க் கார்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
- கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
- நியூசிலாந்தில் 2024 ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.
உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.
கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
இந்நிலையில், வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனால், ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.
- ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
- ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.
இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
- இந்த தொடரின் முதல் இரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கவுகாத்தி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்