செய்திகள்
அஜித் வடேகருக்கு அஞ்சலி செலுத்திய இந்திய, இங்கிலாந்து வீரர்கள்
நாட்டிங்காமில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் மறைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகருக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். #ENGvIND #INDvENG
நாட்டிங்காம்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.
போட்டி தொடங்குவதற்கு முன்னர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் வரிசையில் நின்று சமீபத்தில் மரணமடைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG