செய்திகள்

பிசிசிஐ தலைவராகிறார் தாதா? - விரைவில் நியமிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல்

Published On 2018-08-12 07:11 GMT   |   Update On 2018-08-12 07:11 GMT
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாகூரை பதவியில் இருந்து தூக்கிய சுப்ரீம் கோர்ட், அதற்கென தனி குழுவை நியமித்தது. நீதிபதி லோதா குழு பரிந்துரைத்த நிர்வாகிகளின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில், அடுத்த பிசிசிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைவராக இருப்பவர்களுக்கு என சில தகுதிகளை நீதிபதி லோதா குழு பரிந்துரைத்தது. இந்த தகுதிகள் கங்குலிக்கு இருப்பதால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் கங்குலி, இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். கங்குலிக்கு மூத்த வீரர்கள் பலரின் ஆதரவும் இருப்பதால் அவர் தலைவராவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News