செய்திகள்

மெட்ரோ தொழிலாளர்களுடன் இரவில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்

Published On 2018-04-17 06:21 GMT   |   Update On 2018-04-17 06:21 GMT
மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில் மெட்ரோ தொழிலாளர்கள் உடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி ஆச்சரியப்படுத்தி உள்ளார். #SachinTendulkar
மும்பை:

மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வீடு உள்ளது. இந்நிலையில், அங்கு மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். காரில் அப்பகுதியை கடந்து செல்லும் போது அதனை கண்ட சச்சின் திடீரென அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

காரில் இருந்து இறங்கிய சச்சின் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டில் இணைந்தார். சிறிது நேரம் பேட்டிங் செய்த அவர் பின்னர் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து விடைபெற்றார். #SachinTendulkar #TamilNews


Tags:    

Similar News