செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது வெற்றி

Published On 2018-01-13 03:14 GMT   |   Update On 2018-01-13 03:14 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.
கவுகாத்தி:

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியை எதிர்கொண்டது. இதில் கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்தே பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் (59 சதவீதம்) ஆதிக்கம் செலுத்திய போதிலும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கவில்லை.

கடுமையான முயற்சிகளுக்கு பிறகு கொல்கத்தா வீரர் ஜிகியூனா 73-வது நிமிடத்தில் அட்டகாசமாக ஒரு கோல் போட்டார். பதில் கோல் திருப்ப உள்ளூர் அணி தீவிரம் காட்டிய போதிலும் கொல்கத்தாவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. கவுகாத்தி சந்தித்த 6-வது தோல்வியாகும்.
Tags:    

Similar News