செய்திகள்
5 போட்டியில் விளையாட தடை: கால்பந்து வீரர் ரொனால்டோவின் அப்பீல் மனு தள்ளுபடி
கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அவரது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாட்ரிட்:
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ. போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த அவர் பிரபல கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
நட்சத்திர வீரரான அவர் பார்சிலோனா அணிக்கு எதிரான ஸ்பெயினிஷ் சூப்பர் கோப்பை முதல் அரை இறுதி போட்டியில் அவருக்கு விதிமீறி செயல்பட்டதால் நடுவர் 2 மஞ்சள் அட்டை காட்டினார்.
இதையடுத்து சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் வெறுப்படைந்த அவர் நடுவரை தள்ளி விட்டார்.
இதையடுத்து அவருக்கு 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து ரொனால்டோ அப்பீல் செய்து இருந்தார்.
ஆனால் அவரது அப்பீல் மனு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரியல் மாட்ரிட் அணி பங்கேற்கும் அடுத்த 5 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ. போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த அவர் பிரபல கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
நட்சத்திர வீரரான அவர் பார்சிலோனா அணிக்கு எதிரான ஸ்பெயினிஷ் சூப்பர் கோப்பை முதல் அரை இறுதி போட்டியில் அவருக்கு விதிமீறி செயல்பட்டதால் நடுவர் 2 மஞ்சள் அட்டை காட்டினார்.
இதையடுத்து சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் வெறுப்படைந்த அவர் நடுவரை தள்ளி விட்டார்.
இதையடுத்து அவருக்கு 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து ரொனால்டோ அப்பீல் செய்து இருந்தார்.
ஆனால் அவரது அப்பீல் மனு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரியல் மாட்ரிட் அணி பங்கேற்கும் அடுத்த 5 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.