செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

Published On 2017-06-24 04:55 GMT   |   Update On 2017-06-24 05:18 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் சூப்பர் சீரியஸ் ஓபன் தொடரில் ஆடவருக்கான அரையிறுதிப்போட்டியில் சீனா வீரரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் சூப்பர் சீரியஸ் ஓபன் தொடரில் ஆடவருக்கான அரையிறுதிப்போட்டியில் சீனா வீரரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.
 
சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சீனாவின் யுஹி ஷி பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த ஆட்டத்தில் 21-10 21-14 என்ற செட் கணக்கில் யுஹி ஷீயை, ஸ்ரீகாந்த தோற்கடித்தார். பெண்களுக்கான போட்டியில் இந்திய முன்னணி வீராங்கணைகளான சாய்னா, பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News