search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton"

    • தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் மாணவி ரேஷிகா தங்க பதக்கம் பெற்றார்.
    • ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக ரேஷிகா தேர்வு பெற்றுள்ளார்.

    நெல்லை:

    தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.

    இதன் மூலம் அடுத்த மாதம் சீனாவில் 17-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர். திருமாறன், முதல்வர் முருகவேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பக்கவாட்டு சுவற்றில் பேட்மிண்டன் பிரபலங்கள் படங்கள்
    • வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர இருக்கைகள் அமைப்பு

    பொதுவாக மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படும். சில இடங்களில் பூங்கா உருவாக்கி, பயன்படுத்தப்படும். ஆனால், அசாமில் உள்ள ஒரு இடத்தில் தொழில் அதிபர் ஒருவரால் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி அழகிய பேட்மிண்டன் மைதானமாக உருவாகியுள்ளது.

    அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள நா-அலி (Na-Ali) ரெயில்வே பாலம் செல்கிறது. ரெயில்வே பாலத்திற்கு கீழ் நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பேட்மிண்டன் மைதானமாக மாற்றினால் என்ன? என அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.பி. அகர்வாலாவிற்கு தோன்றியது.

    இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட பேட்மிண்டன் நிர்வாகத்தை அணுக, அவர்களும் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அகல்வாலா அந்த இடத்த அழகிய பேட்மிண்டன் மைதானமாக மாற்றினார். சுவற்றின் இரு புறங்களிலும், பேட்மிண்டன் பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

    வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

    இந்த மைதானத்தை ஜோர்ஹாட் பேட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பேட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார்.

    தொழில் அதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை கட்டி கொடுத்துள்ளார். கடந்த 16-ந்தேதி இந்த மைதானத்தை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மான தொடங்கி வைத்தார். விரைவில் இந்த மைதான நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சின்னமணிநகர் இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சின்னமணிநகர் இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இறகு பந்து கழக தலைவரும், கவுன்சிலருமான சந்திரபோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர், இதுபோன்ற விளையாட்டுகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்று விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார்.

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் பொன்னப்பன் மற்றும் பாஸ்கர், செந்தில்குமார், மணி, அல்பட் உள்பட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
    • இவர்களின் சாதனை நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    புதுடெல்லி:

    ஸ்லோவேனியாவின் மரிபோர் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா தங்கம் வென்று அசத்தி உள்ளார். இவர், ஆடவர் ஒற்யைர் இறுதிப்போட்டியில் தைவான் வீரர் சூ லீ யாங்கை 21-18 21-14 என்ற நேர்செட்களில் வென்றார்.

    இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி அரையிறுதியில் டென்மார்க் ஜோடியை 21-15 21-19 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் மற்றொரு ஜோடியிடம் 12-21 13-21 என தோல்வியடைந்தது. 

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    இந்திய பேட்மிண்டனின் தொடர் வளர்ச்சி மற்றும் வெற்றியை இந்த வீரர்களின் சாதனைகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது.
    • கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கப்பச்சி கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிபோட்டி நடந்தது.

    இதில் இளித்துறை அணிக்கும் கெங்கமுடி அணியும் மோதின. இந்த போட்டியில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டனர். அவருக்கு கிளப் சார்பில் மேளத்தளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளர்ச்சிக்காக ரூபாய்_25000 நிதி உதவி வழங்கினார்.

    • சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி
    • இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    பேசெல்:

    ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங் ஜோடியை 54 நிமிடங்களில் 21-19, 24-22 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்த நிலையில், இன்றைய வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். சாத்விக்-சிராக் ஜோடிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

    • மாநில இறகு பந்து போட்டிக்கு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தியது.

    இதில் 19 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவியை முதல்வர் புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில்

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    • மற்ற இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர்.

    வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

    மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் வள்ளியூர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
    வள்ளியூர்:

    திருவனந்தபுரத்தில் கேரளா இறகுபந்து அகாடமி சார்பில் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 4-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் இறகுபந்து போட்டி நடைபெற்றது.

    இப் போட்டியில் தேசிய அளவிலான அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
    இரட்டையர் பிரிவினருக்கான இறுதி போட்டியில் வள்ளியூர் எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியும் அசாம் மாநில அணியும் மோதியது. எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியில் அதன் கோச்சர் பிரியா கவின்வேந்தன் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த போன்ஷியா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர்.

    இந்த அணி அசாம் அணியை தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  மேலும் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரியா கவின்வேந்தன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

     வெற்றி பெற்ற வீராங்கனைகளை வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சங்கரவெங்கடேசன், அரசு மருத்துவர் கவிதா சங்கரவெங்கடேசன், வழக்குரைஞர்கள் கல்யாணகுமார், ராஜஜெகன், தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன், புஷ்பராஜ், மேக்ரோ ஐ.டி.இ. தாளாளர் பொன்தங்கதுரை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
    காயல்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய பூப்பந்து போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் 8 அணிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையை தொடர்ந்து லீக் முறை ஆட்டத்திற்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன. இவற்றில் சென்னை தெற்கு ரெயில்வே அணி முதலிடத்தை பிடித்து ரூ.40 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை வென்றது. 

    மும்பை மேற்கு ரெயில்வே அணி 2-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பெற்றது.சென்னை பி.எஸ். அப்துர் ரகுமான் க்ரஸன்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும்,மங்களூர் ஆல்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இந்த அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிறைவு நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

    இதற்கான ஏற்பாடுகளை சுற்றுப்போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் நசீர் அகமது, செயலாளர் மாஸ்டர் பஷீருல்லாஹ், பொருளாளர் கட்டா மரைக்கார், துணைச் செயலாளர் ஷேக் உள்பட பலர் செய்திருந்தனர்.

    காயல்பட்டினம் அலியார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்ட பணிகள் தொடங்கின. 

    அலியார் தெரு பள்ளிக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு தமிழக கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மெஜில்லா பீரிஸ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஓடக்கரை பள்ளிக்கு ரூ.20.40 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். ஊர் தலைவரும் நகராட்சி கவுன்சிலருமான சுகு என்ற அரங்கநாதன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கல் அரசி,தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், இளைஞரணி செயலாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தி.மு.க. துணை செயலாளர் காதர், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×