செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

Published On 2017-06-18 09:11 GMT   |   Update On 2017-06-18 09:11 GMT
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிரா 50 ஒவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

இதற்கான டாஸ் மதியம் 2.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியை பாகிஸ்தான் அணி விளையாடும். 

அதேபோல், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, இறுதி போட்டியிலும் தனது அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News