இந்தியா

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

Published On 2022-08-05 12:40 GMT   |   Update On 2022-08-05 12:40 GMT
  • ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மம்தா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இரு தலைவர்களும் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தார்.

இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தலைவர்களும் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News