இந்தியா

கோவிலுக்கு வந்த காட்டு யானையுடன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்

Published On 2024-01-06 04:18 GMT   |   Update On 2024-01-06 04:18 GMT
  • வரலாற்று பிரசித்தி பெற்ற மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
  • காட்டு யானை கோபால சாமி கோவில் வளாகத்துக்கு வந்து சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று வருகிறது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலு பேட்டில் அமைந்துள்ளது கோபால சாமி மலை கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று அவ்வப்போது, மலைமீது உள்ள கோபால சாமி கோவில் வளாகத்துக்கு வந்து சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று வருகிறது. இந்த வீடியோ பல முறை சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் கோபால சாமி மலை கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காட்டு யானை வருமா என, ஆர்வத்துடன் எதிர பார்ப்பார்கள். இதுவரை அந்த யானையால், எந்த அசம்பாவிதமும் ஏற்பட வில்லை.

இந்நிலையில் காலை நேரத்தில் கோவில் வளாகத்திற்க்கு திடீரென அந்த காட்டு யானை வந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் குஷியடைந்தனர். அவர்கள் யானையின் அருகில் சென்று போட்டோ, வீடியோ செல்பி எடுத்தனர். ஆனால் யானை யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், அங்கிருந்து சென்றது.

Tags:    

Similar News