இந்தியா

மணிப்பூரில் முதல்வர் பங்களா அருகே பயங்கர தீ விபத்து

Published On 2024-06-15 21:07 IST   |   Update On 2024-06-15 21:07:00 IST
  • நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர்.
  • தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள உயர் பாதுகாப்பு செயலக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் என் பிரேன் சிங்கின் அதிகாரபூர்வ பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு

நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளிவரவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அசாமின் எல்லையில் உள்ள மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில், பள்ளத்தாக்கு ஆதிக்கத்தில் உள்ள மெய்டேய் சமூகத்திற்கும், மலையில் ஆதிக்கம் செலுத்தும் ஹ்மர் பழங்குடியினருக்கும் இடையே புதிய வன்முறை வெடித்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News