இந்தியா

விளைநிலத்தில் இருந்து பீய்ச்சு அடித்த எரிவாயு- ஆந்திராவில் பரபரப்பு

Published On 2024-06-15 18:35 IST   |   Update On 2024-06-15 19:10:00 IST
  • ஆந்திரா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்.
  • 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து பீய்த்து அடித்த எரிவாயு.

ஆந்திராவில் விளை நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எரிவாயு பீய்ச்சி அடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 15 மீட்டர் உயரத்திற்கு, எரிவாயு பீய்ச்சி அடித்து வெளியேறியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து இதுவரை தண்ணீர் மட்டுமே வந்த நிலையில், திடீரென எரிவாயு வந்ததாக விவசாயிகள் தகவல் வெளியானது.

சம்பவம் குறித்து, ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசராணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News