இந்தியா

அரசியல் சாசனத்தை நமக்கு வழங்கிய மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்துவோம்- பிரதமர் மோடி

Published On 2022-11-26 04:38 GMT   |   Update On 2022-11-26 04:39 GMT
  • அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

1949-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கிய பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "இன்று, அரசியலமைப்பு தினத்தில், நமது அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பெருமக்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். மேலும் நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News