இந்தியா

நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி குறை கேட்கும் மந்திரி ரோஜா

Published On 2023-11-15 07:10 GMT   |   Update On 2023-11-15 07:10 GMT
  • திருப்பதி மாவட்டம் புத்தூர் அடுத்த பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார்.
  • ரோஜா கிராம மக்களிடையே நெருங்கி பழகி அரசின் நல திட்டங்கள் குறித்து வீடு வீடாக விளக்கம் அளித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மந்திரி ரோஜா. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இதனால் ரோஜா அரசின் நல திட்டங்கள் குறித்து தனது தொகுதி முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று திருப்பதி மாவட்டம் புத்தூர் அடுத்த பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார்.

ரோஜா கிராம மக்களிடையே நெருங்கி பழகி அரசின் நல திட்டங்கள் குறித்து வீடு வீடாக விளக்கம் அளித்தார்.

பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்கி இருந்தார்.

Tags:    

Similar News