இந்தியா

சிசோடியா பதவி விலகக்கோரி டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்

Published On 2022-08-20 08:21 GMT   |   Update On 2022-08-20 08:21 GMT
  • ஆம் ஆத்மி தலைமையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி.
  • அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை.

டெல்லியில் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்பட 15 இடங்களில் நேற்று சிபிஐ பல மணிநேரம் சோதனை செய்தது.

டெல்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் 15 பேரில் மணீஷ் சிசோடியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

டிடியு மார்க்கில் உள்ள டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஆம் ஆத்மி தலைமையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

கலால் கொள்கை ஊழல் வழக்கில், சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவின் பெயர் உள்ளதால், அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

Tags:    

Similar News