இந்தியா

உ.பியில் இ-ரிக்‌ஷா மீது லாரி மோதி விபத்து: 5 பேர் பலி- 3 பேர் காயம்

Published On 2022-07-01 10:13 GMT   |   Update On 2022-07-01 10:13 GMT
  • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுனர் உள்பட இருவரை கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தய் மாவட்டம் ஒட்ரா கிராமம் அருகே பிரயாக்ராஜ்- அயோத்தி புறவழிச்சாலையில் இ- ரிக்‌ஷா மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இ- ரிக்‌ஷாவில் பயணம் செய்த பூல் காளி (60), ராஜேந்திரா (45), ரகுவிர் (55), நிர்மலா (52) மற்றும் அடையாள தெரியாத நபர் என 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அம்மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீஷ் குப்தா, போலீஸ் சுப்பிரண்டு சோமன் பர்மா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுனர் உள்பட இருவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News