இந்தியா

பொம்மை தலைவரை நியமித்தால் காங்கிரஸ் பிழைக்காது: பிரிதிவிராஜ் சவான்

Published On 2022-08-29 02:09 GMT   |   Update On 2022-08-29 02:09 GMT
  • தேர்தல் மூலம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • கட்சியை காப்பாற்ற அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிருப்தி தலைவர்கள் குழுவை சேர்ந்த மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் சட்ட விதிகளின்படி, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மட்டுமின்றி, காரிய கமிட்டி உள்பட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க விருப்பம் இல்லாவிட்டால், மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தேர்தல் மூலம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, யாரோ ஒரு பொம்மை தலைவரை தலைவராக உட்கார வைத்து, பின் இருக்கையில் இருந்து இயக்குவது பயன்படாது. அப்படி செய்தால் காங்கிரஸ் பிழைக்காது. கட்சியை காப்பாற்ற அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News