இந்தியா

5ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு

Published On 2024-05-20 16:05 IST   |   Update On 2024-05-20 16:05:00 IST
  • 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
  • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.

இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 47.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார் - 45.33 சதவீதம்

மகாராஷ்டிரா- 38.77 சதவீதம்

மேற்கு வங்காளம்- 62.72 சதவீதம்

ஒடிசா - 48.95 சதவீதம்

ஜார்கண்ட்- 53.90 சதவீதம்

ஜம்மு காஷ்மீர்- 53.90 சதவீதம்

லடாக்- 61.26 சதவீதம்

உத்தரபிரதேசம்- 47.55 சதவீதம்

Tags:    

Similar News