இந்தியா
ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
- பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
- இந்தப் பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சனைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது என தெரிவித்துள்ளார்.