இந்தியா

கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்: சித்தராமையா உத்தரவு

Published On 2024-01-25 13:19 GMT   |   Update On 2024-01-25 13:19 GMT
  • கர்நாடகாவில் கடந்த 2003-ம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது.
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு:

மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிதிச்சுமையை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன.

இதற்கிடையே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது.

இந்நிலையில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, முதல் மந்திரி சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு 13,000 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் 13,000 ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது என்று நம்புகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News