இந்தியா

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Published On 2022-10-05 16:27 GMT   |   Update On 2022-10-05 16:27 GMT
  • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
  • காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

காசியாபாத்:


உத்தர பிரதேச மாநிலம் லோனி நகரில் உள்ள பப்லூ கார்டன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 10 மாத குழந்தை உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 4 பேர் வழியிலேயே இறந்துவிட்டனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து முதவல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News