இந்தியா

1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்: மத்திய மந்திரி

Published On 2024-02-01 08:19 GMT   |   Update On 2024-02-01 08:20 GMT
  • 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
  • பாதுகாப்பு துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜி.டி.பி.யில் 3.4 சதவீதம் ஆக இருக்கும்.

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடு முழுவதும் புதிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடங்கும். சரக்கு ரெயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.

10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்கள் வாங்க உள்ளன. பாதுகாப்பு துறையில் முதலீடு 11.1 சதவீதம் ஆக உயர்த்தி 11, 11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

பாதுகாப்பு துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜி.டி.பி.யில் 3.4 சதவீதம் ஆக இருக்கும். விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News