search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirmala Sitharaman"

    • மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • பொள்ளாச்சி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பா.ஜனதா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மீண்டும் 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.

    இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வருகிறார்கள். மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடந்து வந்தன.

    மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களை காட்டி, மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இன்று மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அந்த பேரணி, ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீன மடம் அருகே நிறைவடைகிறது.

    பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் அமித்ஷா ஈடுபடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறார் என்று பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காரைக்குடியில் நடக்க இருந்த வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்கிறார் என கூறப்பட்டது.

    இதற்காக அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா பங்கேற்க இருந்த வாகன பேரணி திடீரென ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதேபோல் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு காலை 9.45 மணிக்கு வருகிறார். அங்கு, கிருஷ்ணகிரி பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

    அதன்பிறகு, ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்று பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பகல் 12.35 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர், அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஆதரவாக வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

    நாளை (சனிக்கிழமை), கோவை அவிநாசியில் காலை 10.30 மணிக்கு தன்னார்வலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது, நீலகிரி வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர், மாலை 4 மணிக்கு கோவை சென்று, வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட வாகன பேரணியில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ச்சியாக, தொண்டாமுத்தூர் செல்கிறார். அங்கு, அறிவுசார் பிரிவினருடன் கலந்துரையாடுகிறார்.

    அப்போது, பொள்ளாச்சி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தன்னுடைய 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, கோவையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

    • மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும்.
    • பரகால பிரபாகர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிரந்துள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்- மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகாலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும்.

    மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான்.

    இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்" என்றார்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ள எச்சரிக்கை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பரகால பிரபாகர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • பெங்களூரு கடும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது.
    • இது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது என மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.

    பெங்களூரு:

    இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் கடந்த மார்ச் மாதம் முதல் தண்ணீர் பஞ்சம் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் பின்னடவை எதிர்கொண்டது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது மாசடைந்த நீர் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக காலரா போன்ற நோய் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    முதல் மந்திரி சித்தராமையா ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதில் நீர் மற்றும் பாசன பணிகளும் அடங்கியுள்ளன.

    ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளார். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகையை கூட கர்நாடக அரசு வழங்கவில்லை.

    கர்நாடகாவில் பயங்கரவாத செயல்பாடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவை சின்ன பாறை தான் எனக்கூறியவர் இந்திரா காந்தி.
    • கச்சத்தீவு பற்றிய உண்மை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்றார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே முன்னாள் பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும் கருதவில்லை.

    ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையம், இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையம் தேர்தலுக்காக தான் பேசவேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. அதனால் இப்போது பேசப்படுகிறது.

    கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்கு புறம்பான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அப்போதும் கூட்டணி வைத்திருந்தன. இப்போதும் கூட்டணி வைத்துள்ளன.

    தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது தி.மு.க. அமைதியாகவே இருந்தது.

    ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ் 1967-க்கு பிறகு தமிழகத்தில் இன்றும் வெற்றி பெற முடியவில்லை.

    கச்சத்தீவை சின்ன பாறை தான் எனக் கூறியவர் இந்திரா காந்தி.

    தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கச்சத்தீவு பற்றிய உண்மை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என குறிப்பிட்டார்.

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணமில்லை என்பதால் மறுத்து விட்டேன் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்
    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    இந்நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் தேர்தலில் போட்டியிட மறுப்பு.
    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையில் காசில்லை. ஆனால் அவர் பையில், படுக்கை அறையில் பணம் உள்ளது.

    இந்தியாவின் சர்வாதிகாரம் என அமெரிக்க, ஜெர்மனி கூறுவதை நிர்மலா சீதாராமனின் கணவரே ஆதரிக்கிறார்.

    தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
    • முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

    கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?
    • 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

    வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    களத்தை சந்திக்க பயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்று கூறினார்.

    இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியின் போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

    • ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
    • போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:-

    பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று ஒருவேளை இல்லை என பதில் அளித்தேன். போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களா? இந்த மதத்தில் இருந்து வந்தவரா? இங்கிருந்து வந்தீர்களா? போன்ற வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவராக உள்ளேன். ஆகவே, நான் போட்டியிடவில்லை." என்றார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    • வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்
    • அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    வட சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்.

    கடந்த வருடம் சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகனின் மனைவி பிரவீனா ஆஜரானார். பின்பு இந்த வழக்கு விவகாரம் பெரிதாகிவிட, விவசாயிகள் மீது பதிந்த வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைத்தது.

    இந்த விவகாரத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பாலமுருகன் கடிதம் எழுதினார். அதில், அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, இந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கெல்லாம் அரைநாள் விடுமுறை அறிவித்தது மத்திய அரசு. ஆனால், பாலமுருகன் மட்டும் விடுமுறை ஏதும் எடுக்காமல் அன்று முழுவதும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். எனக்கு விடுமுறை வேண்டாம். என் அலுவலகம் வழக்கம்போல செயல்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய வருவாய்த்துறைச் செயலாளருக்கும் அவர் கடிதமும் எழுதினார்.

    இதனையடுத்து அவர், பணி ஓய்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதியே தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    இந்நிலையில், குழந்தைகளை எந்தவித தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை பாஜக மீறி இருக்கிறது. அதேபோல், தேர்தல் நன்னடத்தை 8 விதிகளின் படி மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என்ற விதியையும் நிர்மலா சீதாராமன் மீறி இருக்கிறார். இந்த சட்ட மீறல்களுக்காக, மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

    கடந்த 16-ம் தேதி ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா ஊடக விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதில், "இந்த கூட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால், இந்து மதத்தையே ஒழிப்பேன் என்று கூறுவதையும், அதை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடுவதையும் என்ன சொல்வது.. இதை கூறியதற்கே நாம் சீறியிருக்க வேண்டாமா?

    எல்லா மதங்களையும் ஒழிப்பேன் எனக் கூற அவர்களுக்கு தைரியம் கிடையாது. ஆன்மீகத்திற்கு எதிரான எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சியாக வரக்கூடாது. நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டி தின்னக்கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்" என்று பேசியிருந்தார்.

    கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பேரணியில், பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ×