இந்தியா
83-வது பிறந்தநாள்: சரத்பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- சரத்பவார் இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- சரத் பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகாராட்டிர மாநில முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் சரத்பவார் இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, "சரத்பவாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட, ஆரோக்கியமான ஆயுளுடன் இருக்க ஆசீர்வதிக்கட்டும் என்று தெரிவித்தார்.