இந்தியா
திடீரென தீப்பிடித்த மீன்பிடி படகுகள்- கடலில் குதித்து உயிர்தப்பிய மீனவர்கள்
முனம்பம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழக மீனவர்களின் 3 படகுகள் தீக்கிரையாகின.
கொச்சி:
கேரளாவின் கொச்சி அருகே உள்ள முனம்பம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விபின் மற்றும் பரவூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழக மீனவர்களின் 3 படகுகள் தீக்கிரையாகின. பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு படகில் தீப்பிடித்து அடுத்த படகிற்கு பரவியதும் படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.