காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு 21-ந்தேதி வரை விடுமுறை
புதுடெல்லி:
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு பரவி வருகிறது. காற்று மாசுவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த காற்று தரமேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையொட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வருகிற 21-ந் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
டெல்லியை சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 5 மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வருகிற 30-ந் தேதி வரை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்