செய்திகள்
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நீடிப்பார்- ஹரீஷ் ராவத் பேட்டி
எல்லாவிதமான பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாப் புதிய முதல் மந்திரி சரண்ஜித்சிங் சன்னியுடன் ஏற்பட்ட மோதலால் நவ்ஜோத்சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை கடந்த மாதம் 28-ந் தேதி ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நீடிப்பார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மேலிடப் பார்வையாளருமான ஹரீஷ் ராவத் தெரிவித்தார்.
அவரும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணு கோபாலும் சித்துவுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு நடந்த காங்கிரஸ் கூட்டத்தின் முடிவில் அவர் இதை தெரிவித்தார். எல்லாவிதமான பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் ஹரீஷ் ராவத் மேலும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... தனியாக நடந்து சென்ற 100 பெண்களிடம் சில்மிஷம்- வாலிபர் கைது