செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

நேபாளம், வங்கதேசத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி - அனுமதி வழங்கியது மத்திய அரசு

Published On 2021-10-07 19:27 GMT   |   Update On 2021-10-07 19:27 GMT
ஈரான் நாட்டுக்கு 10 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி அனுப்ப பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமயத்தில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. 

தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மான்சுக் மாண்ட்வியா கடந்த மாதம் தெரிவித்தார். 



இந்நிலையில், 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Tags:    

Similar News