செய்திகள்
கொரோனா காலத்தில் ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது- பிரதமர் மோடி
ஆசிரியர் தினத்தில், இளம் வயதினர் அறிவை வளர்ப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் கற்பித்தல் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா காலங்களில் மாணவர்களின் கல்வியில் புதுமை மற்றும் அவர்களது கல்வி தொடருவதை உறுதி செய்தது பாராட்டத்தக்கது.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தேசத்திற்கு அளித்த பங்களிப்புகளை நினைவு கூர்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தில், இளம் வயதினர் அறிவை வளர்ப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் கற்பித்தல் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தேசத்திற்கு அளித்த பங்களிப்புகளை நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... தடுப்பூசி போடவில்லையா?: சம்பளம் முழுசா கிடைக்காது- மந்திரி எச்சரிக்கை