செய்திகள்
7 ஆண்டுகளாக மோடி ஒரே பேச்சை பேசுகிறார்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
வளர்ச்சி, சிறு விவசாயிகள் பிரச்சினைகளில் முந்தைய அரசுகளை மோடி விமர்சித்து வருகிறார். செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது.
புதுடெல்லி :
பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றினார். அதுகுறித்து பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசி வருகிறார். அதைத்தான் மக்கள் கேட்டு வருகிறார்கள். சிறு விவசாயிகள் போன்ற ஒடுக்கப்பட்டோருக்காக எதுவுமே செய்யவில்லை.
திட்டங்கள் பற்றிய அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறார். அவை ஒருபோதும் களத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. அவர் எவ்வளவோ விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவற்றை கடைபிடிப்பது இல்லை. 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளுக்கு அழிவு ஏற்படுத்தி விட்டார்.
மேலும், வளர்ச்சி, சிறு விவசாயிகள் பிரச்சினைகளில் முந்தைய அரசுகளை மோடி விமர்சித்து வருகிறார். செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மன்மோகன்சிங், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு பற்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த எண்ணிக்கையை மட்டுமாவது மாற்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றினார். அதுகுறித்து பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசி வருகிறார். அதைத்தான் மக்கள் கேட்டு வருகிறார்கள். சிறு விவசாயிகள் போன்ற ஒடுக்கப்பட்டோருக்காக எதுவுமே செய்யவில்லை.
திட்டங்கள் பற்றிய அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறார். அவை ஒருபோதும் களத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. அவர் எவ்வளவோ விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவற்றை கடைபிடிப்பது இல்லை. 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளுக்கு அழிவு ஏற்படுத்தி விட்டார்.
மேலும், வளர்ச்சி, சிறு விவசாயிகள் பிரச்சினைகளில் முந்தைய அரசுகளை மோடி விமர்சித்து வருகிறார். செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மன்மோகன்சிங், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு பற்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த எண்ணிக்கையை மட்டுமாவது மாற்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.