செய்திகள்
தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும்- எல்.முருகன்
புதிய மந்திரியாக நியமிக்கப்பட்ட எல்.முருகன் இன்று டெல்லி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்டது.
புதிய மந்திரிகள் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
இதில் தமிழ்நாட்டுக்கு ஒரு மந்திரி பதவி வழங்கப்பட்டது. தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் மந்திரியானார்.
புதிய மந்திரியாக நியமிக்கப்பட்ட எல்.முருகன் இன்று டெல்லி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு எல்.முருகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும்.
* 2014க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக குறைந்துள்ளது.
நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்டது.
புதிய மந்திரிகள் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
இதில் தமிழ்நாட்டுக்கு ஒரு மந்திரி பதவி வழங்கப்பட்டது. தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் மந்திரியானார்.
புதிய மந்திரியாக நியமிக்கப்பட்ட எல்.முருகன் இன்று டெல்லி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு எல்.முருகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும்.
* 2014க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக குறைந்துள்ளது.