செய்திகள்
மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது
தாராவியில் நேற்று மேலும் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 795 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை :
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 24 ஆயிரத்து 136 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்து 26 ஆயிரத்து 155 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 52 லட்சத்து 18 ஆயிரத்து 768 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 36 ஆயிரத்து 176 போ் பாதிப்பில் இருந்து மீண்டனர்.
தற்போது மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 14 ஆயிரத்து 368 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 601 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் உயிரிழப்பு 90 ஆயிரத்தை தாண்டியது. மாநிலத்தில் இதுவரை வைரஸ் நோய்க்கு 90 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையை பொறுத்தவரை 1,037 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 37 பேர் பலியாகி உள்ளனர். நகரில் இதுவரை 6 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 708 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 345 நாட்களாக உள்ளது.
தாராவியில் நேற்று மேலும் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 795 ஆக உயர்ந்து உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 24 ஆயிரத்து 136 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்து 26 ஆயிரத்து 155 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 52 லட்சத்து 18 ஆயிரத்து 768 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 36 ஆயிரத்து 176 போ் பாதிப்பில் இருந்து மீண்டனர்.
தற்போது மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 14 ஆயிரத்து 368 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 601 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் உயிரிழப்பு 90 ஆயிரத்தை தாண்டியது. மாநிலத்தில் இதுவரை வைரஸ் நோய்க்கு 90 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையை பொறுத்தவரை 1,037 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 37 பேர் பலியாகி உள்ளனர். நகரில் இதுவரை 6 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 708 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 345 நாட்களாக உள்ளது.
தாராவியில் நேற்று மேலும் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 795 ஆக உயர்ந்து உள்ளது.