செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையத்துக்காக வாதாடிய வக்கீல் திடீர் விலகல்
தேர்தல் ஆணையத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் மொகித் டி.ராம் அக்குழுவில் இருந்து விலகினார்.
புதுடெல்லி:
தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடும் வக்கீல்கள் குழுவில் இருந்தவர் மொகித் டி.ராம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இவர் தேர்தல் ஆணையத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் திடீரென தேர்தல் ஆணையத்துக்கான வக்கீல்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டுடன் தனக்கு ஒத்துப்போகவில்லை என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடும் வக்கீல்கள் குழுவில் இருந்தவர் மொகித் டி.ராம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இவர் தேர்தல் ஆணையத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் திடீரென தேர்தல் ஆணையத்துக்கான வக்கீல்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டுடன் தனக்கு ஒத்துப்போகவில்லை என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.