செய்திகள்
வலியகேசவன் யானை

குருவாயூர் கோவில் யானை மரணம்

Published On 2021-03-30 04:56 GMT   |   Update On 2021-03-30 04:56 GMT
பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானை முகாமில் வலியகேசவன் யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் புகழ் பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான யானைகள் உள்ளது. இந்த யானைகளில் 52 வயது வலியகேசவன் யானையும் ஒன்று. இந்த யானை குருவாயூரப்பன் கோவில் திருவிழாவில் கிருஷ்ணன் தங்க சிலையை தாங்கி செல்லும்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றி இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த யானை திடீர் மரணம் அடைந்தது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிலுக்கு சொந்தமான யானை முகாமில் வலியகேசவன் யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News